இடைநிலை ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என அறிவிப்பு


இடைநிலை ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என அறிவிப்பு
x
தினத்தந்தி 6 Oct 2023 5:10 AM GMT (Updated: 6 Oct 2023 5:24 AM GMT)

இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினர் தங்களது வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.

சென்னை,

'சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினரும், பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம், ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கத்தினரும், டெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மீண்டும் போட்டித் தேர்வு நடத்தக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதில் பகுதிநிலை ஆசிரியர்கள் மற்றும் டெட் ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

ஆனால் தற்போது இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் பள்ளிகளுக்கு செல்லாமல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். எண்ணும் எழுத்தும் திட்டம் மற்றும் பள்ளி வகுப்புகளை புறக்கணிக்கும் போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர்.

இடைநிலை ஆசிரியர் சங்கத்தில் மொத்தமாக 20 ஆயிரம் ஆசிரியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். எனவே வரும் 9-ம் தேதி ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பமாக உள்ள நிலையில் ஆசிரியர்களின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி வெகுவாக பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.


Next Story