ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது நிர்வாகிகள் சந்தித்து முக்கிய ஆலோசனை


ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது  நிர்வாகிகள் சந்தித்து முக்கிய ஆலோசனை
x
தினத்தந்தி 23 Feb 2023 12:30 PM GMT (Updated: 23 Feb 2023 12:35 PM GMT)

முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தை சந்தித்து அவரது ஆதரவு நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.

பெரியகுளம்,

கடந்த ஜூலை 11-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இதனால் பெரியகுளம் பகுதியில் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மத்தியில் பரப்பு ஏற்பட்டது.இந்நிலையில் நேற்று பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டில் இருந்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை அவரது ஆதரவாளர்கள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அவரது ஆதரவாளர்கள் தீர்ப்பு வழங்கியது முதலே வரத் தொடங்கினர். முன்னாள் எம்.பி.கோபாலகிருஷ்ணன் திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் வைகை பாலன்,மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன், பொருளாளர் துதி திருநாவுக்கரசு மற்றும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் வந்திருந்தனர்.


Next Story