வாகனம் மோதி முதியவர் உடல் நசுங்கி பலி


வாகனம் மோதி முதியவர் உடல் நசுங்கி பலி
x

வாகனம் மோதி முதியவர் உடல் நசுங்கி பலியானார்.

பெரம்பலூர்

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரில் கல்பாடி பிரிவு சாலை அருகே நேற்று அதிகாலை 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் உடல் நசுங்கி இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த முதியவர் சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவர் யார்?, அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்தும், விபத்தை ஏற்படுத்தி சென்ற வாகனம் குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story