மாடிப்படியில் தவறி விழுந்து முதியவர் சாவு


மாடிப்படியில் தவறி விழுந்து முதியவர் சாவு
x

மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த முதியவர் இறந்தார்.

சிவகங்கை

இளையான்குடி

இளையான்குடி அருகே உள்ள குமாரக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாங்கம் (வயது 80). விவசாயி. இவர் வீட்டின் மாடியில் தூங்குவது வழக்கம். சம்பவத்தன்று இரவு மாடியில் தூங்குவதற்காக படி ஏறி சென்றார். அப்போது அவர் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.

உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக இளையான்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து இளையான்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

1 More update

Related Tags :
Next Story