மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலி


மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலி
x

மது போதையில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலியானார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் வைத்தியநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு (வயது 65). இவர் பெருமத்தூரில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று முன்தினம் இரவு மது குடித்துவிட்டு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மது போதையில் அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில், பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வராசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story