தீபாவளியையொட்டி, சென்னை - நெல்லைக்கு சிறப்பு வந்தே பாரத் ரெயில்


தீபாவளியையொட்டி, சென்னை - நெல்லைக்கு சிறப்பு வந்தே பாரத் ரெயில்
x

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்படவுள்ளது என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை,

தீபாவளி பண்டிகை வரும் 12-ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் வெளியூர்களில் வேலை செய்யும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வர். இதற்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரெயில்கள் இயக்கப்படும். அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்படவுள்ளது என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

வரும் 9ம் தேதி காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து நெல்லைக்கும், பிற்பகல் 3 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னைக்கும் ரெயில் இயக்கப்படவுள்ளது . இந்த ரெயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story