வாகனம் மோதி ஒருவர் பலி


வாகனம் மோதி ஒருவர் பலி
x

வாகனம் மோதி ஒருவர் பலியானார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே சின்னாறு பகுதியில் நேற்று முன்தினம் இரவு சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அடயாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story