குண்டர் சட்டத்தில் மேலும் ஒருவர் கைது


குண்டர் சட்டத்தில் மேலும் ஒருவர் கைது
x

நெல்லை அருகே குண்டர் சட்டத்தில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

கோபாலசமுத்திரம் பெட்ரோல் பங்க் அருகே கடந்த ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி சேரன்மாதேவி சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் (வயது 39) என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் 4 பேரை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சேரன்மாதேவி விவேகானந்தர் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் பெருமாள் சுப்பிரமணியன் (20) என்பவரையும் கலெக்டர் உத்தரவுப்படி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story