புதிய சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்


புதிய சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்
x

கோட்டூர் அருகே புதிய சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கோட்டூர்;

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தை சேர்ந்த மழவராயநல்லூர் ஊராட்சி தட்டாங்கோவில் கிராமத்தில் 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இவர்களின் பயன்பாட்டுக்கு பொது சுகாதாரவளாகம் கட்டப்பட்டு பயன்படுத்தி வந்தனர். இந்த சுகாதார வளாகம் பழுதடைந்து சீரமைக்கப்பட்டது. சுகாதாரவளாகம் சீரமைக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்த பிறகும் மக்களின் பயன்பாட்டுக்கு விடப்படவில்லை.இதனால் கழிவறை வசதிகள் இல்லாமல் பொது மக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே சீரமைக்கப்பட்ட பொது சுகாதாரவளாகத்தை பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story