பகுதிநேர ரேஷன் கடை திறப்பு


பகுதிநேர ரேஷன் கடை திறப்பு
x

பகுதிநேர ரேஷன் கடை திறக்கப்பட்டது.

கரூர்

க.பரமத்தி ஒன்றியம், முன்னூர் ஊராட்சியில் உள்ள வேலம்பாளையத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.விடம் பகுதி நேர ரேஷன் கடை வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று வேலம்பாளையத்தில் உள்ள ரேஷன் கடையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து அதற்கான தொடக்க நிகழ்ச்சி வேலம்பாளையத்தில் நடந்தது. விழாவிற்கு முன்னூர் ஊராட்சி மன்ற தலைவர் என்ஜினீயர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் நெடுங்கூர் கார்த்தி, முன்னூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக அரவக்குறிச்சி எம.்எல்.ஏ. இளங்கோ கலந்து கொண்டு பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை அவரே அளந்து வினியோகம் செய்தார். இதில், பொது வினியோகத்திட்ட அதிகாரிகள், கூட்டுறவு சங்க அதிகாரிகள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story