பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் - தமிழ்நாடு அரசு


பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் - தமிழ்நாடு அரசு
x

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் தமிழகத்தின் முக்கிய பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

சென்னை,

பக்ரீத் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் சுற்றறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

அதில், "சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு நாளை (28-6-2023) தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 400 சிறப்பு பேருந்துகளும், மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கு 400 சிறப்பு பேருந்துகளும் ஆக மொத்தம் 800 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

ஆகவே தொலைதூர பயணங்கள் மேற்கொள்ள இருக்கும் பயணிகள், தங்களது பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்துகள் இயக்கத்தினை கண்காணித்திட, அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

எனவே பயணிகள் மேற்கூறிய வசதியை பயன்படுத்திக்கொண்டு தங்களது பயணத்தினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story