அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிசாமி செல்ல ஓபிஎஸ் தரப்பு எதிர்ப்பு


அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிசாமி செல்ல ஓபிஎஸ் தரப்பு எதிர்ப்பு
x
தினத்தந்தி 8 Sep 2022 4:31 AM GMT (Updated: 8 Sep 2022 4:32 AM GMT)

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிசாமி இன்று செல்ல உள்ள நிலையில் ஓபிஎஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த நேரத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அலுவலகத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது. பின்னர் ஐகோர்ட்டு உத்தரவின்படி அந்த 'சீல்' அகற்றப்பட்டு, சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

இருப்பினும் அவர் தலைமை அலுவலகத்திற்கு வரவில்லை. இந்த நிலையில் அவர் இன்று கட்சி அலுவலகத்திற்கு வருகிறார். காலை 10 மணிக்கு கட்சி அலுவலகம் வரும் எடப்பாடி பழனிசாமி அங்குள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலகம் செல்ல அனுமதிக்க கூடாது என டிஜிபியிடம் ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் புகழேந்தி புகார் மனு கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த புகார் மனுவில் சிபிசிஐடி விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுக அலுவகத்தில் அனுமதிக்க கூடாது என புகழேந்தி புகார் கொடுத்துள்ளார்.


Next Story