மோட்டார் சைக்கிள் மோதி பெயிண்டர் சாவு


மோட்டார் சைக்கிள் மோதி பெயிண்டர் சாவு
x

மோட்டார் சைக்கிள் மோதி பெயிண்டர் இறந்தார்.

புதுக்கோட்டை

ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் சின்னப்பன். இவரது மகன் கவுதம் (வயது 22). இவர் விராலிமலை தாலுகா, ஆவூர் அருகே திருச்சி-இலுப்பூர் சாலையில் வடக்கு புதுப்பட்டி என்ற இடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கவுதம் நேற்று முன்தினம் இரவு தொழிற்சாலையில் வேலையை முடித்துவிட்டு கடைக்கு செல்வதற்காக திருச்சி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இச்சிகாமலைபட்டியை சேர்ந்த ரெத்தினசாமி மகன் சிவா (25) என்பவர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் கவுதம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கவுதமை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகையன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Related Tags :
Next Story