மின்சாரம் பாய்ந்து பெயிண்டர் பலி


மின்சாரம் பாய்ந்து பெயிண்டர் பலி
x

மின்சாரம் பாய்ந்து பெயிண்டர் உயிரிழந்தார்.

திருச்சி

மின்சாரம் பாய்ந்து சாவு

திருச்சி வடக்கு காட்டூர் அண்ணாநகரை சேர்ந்தவர் டேவிட்ரீகன் (வயது 38). பெயிண்ட் அடிக்கும் தொழிலாளியான இவர் நேற்று காலை கருமண்டபம் எஸ்.எஸ்.நகரில் ஒரு வீட்டில் பெயிண்ட் அடித்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் அருகே சென்ற மின்கம்பியில் அவரது கை உரசியது. இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து டேவிட் ரீகன் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story