குந்தவேல் முருகர் கோவிலில் பங்குனி உத்திரவிழா


குந்தவேல் முருகர் கோவிலில் பங்குனி உத்திரவிழா
x
தினத்தந்தி 26 March 2023 6:45 PM GMT (Updated: 26 March 2023 6:46 PM GMT)

சங்கராபுரம் அருகே குந்தவேல் முருகர் கோவிலில் பங்குனி உத்திரவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே தேவபாண்டலத்தில் பிரசித்தி பெற்ற குந்தவேல் முருகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர விழாவுக்கான கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து கோவில் வளாகத்தில் உள்ள் கொடிகம்பத்துக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து காலை 11 மணிக்கு மேள, தாளம் முழங்க கொடி கம்பத்தில் கொடியேற்றப்பட்டு பங்குனி உத்திர விழா தொடங்கி வைக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான வருகிற 4-ந்தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.


Next Story