நாடாளுமன்ற தேர்தல்: சுயேச்சை வேட்பாளர்கள் ஆர்வம் - ஒரே நாளில் 258 மனுக்கள் தாக்கல்


நாடாளுமன்ற தேர்தல்: சுயேச்சை வேட்பாளர்கள் ஆர்வம் - ஒரே நாளில் 258 மனுக்கள் தாக்கல்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 26 March 2024 6:42 PM GMT (Updated: 27 March 2024 12:07 AM GMT)

39 மக்களவை தொகுதிகளிலும் இதுவரை 751 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் 22 வேட்புமனுக்கள் தாக்கலாகின. 21-ந்தேதி 9 மனுக்களும், 22-ந்தேதி 47 மனுக்களும் பெறப்பட்டன. 23-ந்தேதி (சனி) மற்றும் 24-ந்தேதி (ஞாயிறு) ஆகிய 2 தினங்கள் வேட்புமனுத்தாக்கல் நடைபெறவில்லை.

தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா வேட்பாளர்கள் நேற்று முன்தினம் வேட்புமனுத்தாக்கல் செய்ய ஆர்வம் காட்டினார்கள். மேலும் சுயேச்சை வேட்பாளர்களும் குவிந்ததால் நேற்று முன் தினம் ஒரே நாளில் 405 வேட்புமனுக்கள் தாக்கலாகியது. வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் நேற்று 258 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுவரையில் மொத்தம் 751 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story