சென்னை- கும்மிடிப்பூண்டி இடையே மின்சார ரெயில்கள் 25, 26-ந் தேதிகளில் பகுதியாக ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


சென்னை- கும்மிடிப்பூண்டி இடையே மின்சார ரெயில்கள்  25, 26-ந் தேதிகளில் பகுதியாக ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

சென்னை- கும்மிடிப்பூண்டி இடையே மின்சார ரெயில்கள் பராமரிப்பு பணிகாரணமாக 25, 26-ந் தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கீழ்கண்ட மின்சார ரெயில் சேவைகள் பராமரிப்பு பணிகாரணமாக பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

*மூர் மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி இடையே இரவு 11.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 25, 26-ந்தேதிகளில் பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

*கும்மிடிப்பூண்டி - சென்னை சென்டிரல் இடையே காலை 3.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் வருகிற 25-ந்தேதி கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

*கும்மிடிப்பூண்டி - சென்னை சென்டிரல் இடையே காலை 3.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் இன்று மற்றும் 26-ந்தேதி கும்மிடிப்பூண்டி மற்றும் மீஞ்சூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

*கும்மிடிப்பூண்டி - சென்னை சென்டிரல் இடையே காலை 4.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் இன்று மற்றும் 26-ந்தேதி கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

*சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே இரவு 10.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் வருகிற 25-ந்தேதி மீஞ்சூர் மற்றும் கும்மிடிப்பூண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story