மோட்டார் சைக்கிள் மோதி பிளஸ்-2 மாணவர் பலி


மோட்டார் சைக்கிள் மோதி பிளஸ்-2 மாணவர் பலி
x

விழுப்புரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பிளஸ்-2 மாணவர் இறந்தார்.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள கோவிந்தாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் ஸ்ரீராம் (வயது 16). இவர் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏனாதிமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் பள்ளி முடிந்ததும் மாணவர் ஸ்ரீராம், தனது நண்பர்கள் சிலருடன் பேசியபடி கோவிந்தாபுரம் சுடுகாடு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

விபத்தில் சாவு

அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள், மாணவர் ஸ்ரீராம் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ஸ்ரீராமை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஸ்ரீராமை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story