போலீசார் நினைவேந்தல் அணிவகுப்பு


போலீசார் நினைவேந்தல் அணிவகுப்பு
x

போலீசார் நினைவேந்தல் அணிவகுப்பு நடைபெற்றது.

விருதுநகர்

கடந்த 1.9.2022 முதல் 31.8.2023 வரை பணியின் போது வீர தீர செயல் புரிந்து உயர்நீத்த 180 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விருதுநகர் ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் நேற்று 60 குண்டுகள் முழங்க நினைவேந்தல் அணிவகுப்பு நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் தலைமையில் நடந்த இந்த அணி வகுப்பில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சோமசுந்தரம், சூர்யமூர்த்தி, அசோகன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story