நடிகை கவுதமி அளித்த நில மோசடி புகார் தொடர்பாக போலீசார் விசாரணை


நடிகை கவுதமி அளித்த நில மோசடி புகார் தொடர்பாக போலீசார் விசாரணை
x

நடிகை கவுதமி அளித்த புகார் தொடர்பாக அழகப்பன் என்பவரது வீட்டில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

காரைக்குடி,

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர் கவுதமி. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கறை பகுதியில் வசித்து வருகிறார்.

இவர் கடந்த மாதம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து ஒரு புகார் மனுவை அளித்தார் அதில், எனது மகளின் பராமரிப்பு செலவு மற்றும் எனது மருத்துவ சிகிச்சைக்காக எனக்கு சொந்தமான இடத்தை விற்பனை செய்ய முடிவு செய்தேன். இந்த நேரத்தில் கட்டுமான அதிபர் அழகப்பன் என்பவர் அந்த நிலத்தை விற்றுத்தருவதற்கு உதவி செய்வதாக கூறினார். எனவே எனது நிலத்தை விற்பனை செய்து தருவதற்கான அதிகாரத்தை (பவர் ஆப் அட்டர்னி) அழகப்பனுக்கு வழங்கினேன். இந்த நிலையில் போலி ஆவணங்களை தயாரித்து அழகப்பனும், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் எனது இடத்தை அபகரித்து மோசடி செய்துவிட்டனர்.

இதுபற்றி கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, எனக்கு சொந்தமான இடத்தை மீட்டு தந்து, அபகரித்த அழகப்பன், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று அதில் கூறியிருந்தார்.

மேலும் பாஜக கட்சியில் புகார் அளித்தும் மூத்த நிர்வாகிகள் அழகப்பனுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி நடிகை கவுதமி பாஜக கட்சியில் இருந்து வெளியேறினார்.

இந்த நிலையில் நடிகை கவுதமி அளித்த இந்த நிலமோசடி புகாரில், காரைக்குடி கோட்டையூரில் உள்ள அழகப்பன் என்பவரது வீட்டில் பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.


Next Story