செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கவிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு


செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கவிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு
x

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தாள்-1 தேர்வு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

சென்னை,

தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படுகின்றன.டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாள் செப்டம்பர் 10 ந் தேதி முதல் 15 ந் தேதி வரை கம்ப்யூட்டர் மூலம் நடத்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுருந்தது.இந்த தேர்வு எழுதுவதற்காக 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது.

இந்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தாள்-1 தேர்வு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது ,தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


Next Story