மதுரப்பாக்கம், அரசூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்


மதுரப்பாக்கம், அரசூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 3 Oct 2023 6:45 PM GMT (Updated: 3 Oct 2023 6:47 PM GMT)

மதுரப்பாக்கம், அரசூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

விழுப்புரம்

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி அருகே மதுரப்பாக்கம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ராதாபுரம், குச்சிப்பாளையம், கட்டப்பட்டு, வி.ஆர்.பாளையம், செய்யாது விண்ணான்பாளையம், வாக்கூர், சிறுவள்ளிக்குப்பம், வெட்டுக்காடு, மூங்கில்பட்டு, டி.வி.பட்டு, மாத்தூர், நகரி, முதலியார்குப்பம், குமளம், மதுரப்பாக்கம், சித்தலம்பட்டு, கொடுக்கூர், முட்ராம்பட்டு, நெற்குணம், ஆண்டிப்பாளையம், வாதானூர், திருமங்கலம், டி.புதுக்குப்பம், குமராம்பாளையம், பிடாரிப்பட்டு, தொரவி ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. இதேபோல் அரசூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட திருநாவலூர் மின்னூட்டியில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அரசூர், கே.வி.பாளையம், சித்தானங்கூர், சேத்தனூர், மடப்பட்டு, இருந்தை காலனி, பருகம்பட்டு, ஆணைவாரி ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.


Next Story