சங்கராபுரம், புதுப்பட்டு, ஆலத்தூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்


சங்கராபுரம், புதுப்பட்டு, ஆலத்தூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 10 Sep 2023 6:45 PM GMT (Updated: 10 Sep 2023 6:45 PM GMT)

சங்கராபுரம், புதுப்பட்டு, ஆலத்தூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கள்ளக்குறிச்சி


சங்கராபுரம்,

சங்கராபுரம் துணைமின் நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான சங்கராபுரம், பாண்டலம், குளத்தூர், வடசிறுவள்ளூர், வடசெட்டியந்தல், திம்மனந்தல், கிடங்குடையாம்பட்டு, ஆருர், ராமராஜபுரம், அரசம்பட்டு, அரசராம்பட்டு, மஞ்சப்புத்தூர், பொய்க்குணம், விரியூர், எஸ்.வி.பாளையம், கள்ளிப்பட்டு, கொசப்பாடி, ஜவுளிகுப்பம், மல்லாபுரம், தும்பை, பாச்சேரி, கூடலூர், மோட்டாம்பட்டி ஆகிய இடங் களிலும்,நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.

இதேபோன்று, புதுப்பட்டு, ஆலத்தூர் துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் புதுப்பட்டு, ரங்கப்பனூர், மூலக்காடு, கொடியனூர், பவுஞ்சிப்பட்டு, ஆணைமடுவு, லக்கிநாயக்கன்பட்டி, சேராப்பட்டு, இன்னாடு, புத்திராம்பட்டு, மல்லாபுரம், ராவத்தநல்லூர், பிரம்மகுண்டம், புளியங்கோட்டை, பாவளம், ஆலத்தூர், அழகாபுரம், திருக்கனங்கூர், பிச்சநத்தம், மாதவச்சேரி, பால்ராம்பட்டு, அரியபெருமானூர், ரங்கநாதபுரம், வாணியந்தல், , அகரகோட்டாலம், மூரார்பாளையம், பரமநத்தம், கல்லேரிகுப்பம், பழையசிறுவங்கூர், சித்தேரிப்பட்டு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.

மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story