சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு


சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு
x

சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாட்டிற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு வந்தனர். பின்னர் அவர்கள் கேட்டின் வழியாக மலைப்பாதையில் நடந்து சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் சாமி தரிசனம் செய்ய சென்றனர். பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு பொருட்களால் அபிேஷகம் நடந்தது. பின்னர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். அதேபோல கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



Next Story