சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

கரூர்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு பால், பன்னீர், தயிர், மஞ்சள், இளநீர் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து நந்தி பகவானுக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் மகாதீபாராதனை காட்டப்பட்டது.இதேபோல் நன்செய் புகழூர் மேகபாலீஸ்வரர் கோவில், வெள்ளியணை வெள்ளி நாயகி சமேத வெள்ளி அம்பல ஈஸ்வரர் கோவில், காகிதபுரம் குடியிருப்பு காசி விஸ்வநாதர் கோவில், தோகைமலை கழுகூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்களிலும் நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

1 More update

Next Story