ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை: முதுமலை யானைகள் முகாம் இன்று முதல் 6 நாட்கள் மூடல்


ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை: முதுமலை யானைகள் முகாம் இன்று முதல் 6 நாட்கள் மூடல்
x

பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் சந்தித்து பேச உள்ளார்.

நீலகிரி

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் யானைகளை பராமரித்து வரும் பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை நேரில் சந்திப்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு 5-ந் தேதி முதுமலைக்கு வருகிறார். அங்கு பாகன் தம்பதியை நேரில் சந்தித்து பாராட்டுவதோடு, அங்குள்ள பழங்குடி மக்கள் மற்றும் பாகன்களையும் சந்தித்து பேச உள்ளார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஜனாதிபதி வருகையை முன்னிட்டு முதுமலை தெப்பக்காடு முகாம் தற்காலிகமாக மூடப்படுகிறது. இன்று முதல் 5-ந் தேதி வரை 6 நாட்கள் முகாம் மூடப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, ஜனாதிபதி வருகையை முன்னிட்டு தெப்பக்காடு யானைகள் முகாம் இன்று முதல் 5-ந் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது. யானைகள் முகாமுக்குள் மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மற்ற இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்லலாம் என்று கூறினர்.


Next Story