கோவில்பட்டி: கோவிலுக்கு வந்த குழந்தையிடம் நகை திருடிய பூசாரி கைது


கோவில்பட்டி: கோவிலுக்கு வந்த குழந்தையிடம் நகை திருடிய பூசாரி கைது
x

கோவில்பட்டி அருகே கோவிலுக்கு காது குத்த வந்த குழந்தையிடம் நகை திருடிய பூசாரியை போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டி:

கோவில்பட்டியை அடுத்துள்ள உருளைகுடி, தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அய்யாத்துரை மனைவி முனீஸ்வரி (வயது 28). இவர் கோவில்பட்டி அருகே ஆலம்பட்டி வினை தீர்க்கும் அய்யனார் கோயிலில் தனது குழந்தைக்கு மொட்டை போட்டு, காது குத்துவதற்காக, கடந்த 12-ம் தேதி சென்றுள்ளார். அப்போது, குழந்தையின் கழுத்தில் அணிந்திருந்த மூன்றே கால் பவுன் தங்கநகை திருடு போயிருந்ததாம்.

இதுகுறித்து, முனியசாமி நேற்று (திங்கள்கிழமை) கோவில்பட்டி மேற்கு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்தனர். சப்- இன்ஸ்பெக்டர் ஹரிகண்ணன் கோயில் பூசாரியான குருசாமி மகன் சுப்பிரமணியனிடம் (வயது 61) விசாரணை நடத்தினார்.

விசாரணையில், பூசாரி சுப்பிரமணியன் குழந்தையின் கழுத்தில் அணிந்திருந்த நகையை திருடியது தெரியவந்தது. அவரிடமிருந்து 3.25 பவுன் தங்க நகையை கைப்பற்றி, அவரை கைது செய்தார்.


Next Story