தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்


தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Oct 2023 6:45 PM GMT (Updated: 5 Oct 2023 6:47 PM GMT)

கோட்டூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்

கோட்டூர்:

சென்னையில் நடைபெறும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், கைது செய்த ஆசிரியர்களை தமிழக அரசு உடனடியாக விடுவிக்கக்கோரியும் கோட்டூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் தங்கபாபு தலைமை தாங்கினார்.மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் அமிர்தராஜ், செல்வமணி, கோட்டூர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்டப் பொருளாளர் ஜோன்ஸ், ஆசிரியர்கள் ஐன்ஸ்டீன், ஸ்டெல்லா, அய்யப்பன், ஜான்சிராணி, ஸ்டீபன் ஆகியோர் பேசினர். இதில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கலந்து கொண்டனர்.முன்னதாக வட்டாரச் செயலாளர் பாரதி வரவேற்றார். முடிவில் துணைச் செயலாளர் மோகன்தாஸ் நன்றி கூறினார்.


Next Story