புழல் சிறை காவலர் குடியிருப்பில் சிறை காவலர் தூக்குப்போட்டு தற்கொலை


புழல் சிறை காவலர் குடியிருப்பில் சிறை காவலர் தூக்குப்போட்டு தற்கொலை
x

குடும்ப தகராறில் புழல் சிறை காவலர் குடியிருப்பில், சிறை காவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர்

செங்குன்றம்,

நெல்லையைச் சேர்ந்தவர் காசிராமன் (வயது 29). இவர் 2017-ம் ஆண்டு சிறை காவலராக பணியில் சேர்ந்தார். தற்போது புழல் சிறையில் காவலராக வேலை செய்து வந்தார்.

புழல் சிறை காவலர் குடியிருப்பில் தனது மனைவி சரண்யாவுடன் வசித்து வந்தார். இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவும் இருவருக்கும் வழக்கம்போல் குடும்ப தகராறு ஏற்பட்டது.

இதில் விரக்தி அடைந்த காசிராமன், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த புழல் போலீசார், காசிராமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

===========


Next Story