செங்கல்பட்டில் 24-ந் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்; கலெக்டர் தகவல்


செங்கல்பட்டில் 24-ந் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்; கலெக்டர் தகவல்
x

செங்கல்பட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 24-ந் தேதி நடக்கிறது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 24-ந் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளார்கள்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, என்ஜினீயரிங், ஐ.டி.ஐ., டிப்ளமோ, செவிலியர்கள், ஆய்வக உதவியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் கலந்துக்கொள்ளலாம். 18 முதல் 40 வயதுவரை உள்ளவர்கள் தங்களுடைய கல்விசான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 24-ந் தேதி காலை 10 மணிமுதல் 1 மணிவரை வெண்பாக்கம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையவளாகத்தில் உள்ள செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில்வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன் அடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.


Next Story