காஞ்சீபுரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்


காஞ்சீபுரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
x

காஞ்சீபுரத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் காஞ்சீபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் வருகிற 5-ந் தேதி நடக்கிறது

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 100 சிறப்பு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை தமிழ்நாடு முழுவதும் நடத்திட அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், காஞ்சீபுரம் இணைந்து காஞ்சீபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் வருகிற 5-ந்தேதி (சனிக்கிழமை) மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான மனித வளதேவைக்கு நேர்முக தேர்வை நடத்த உள்ளது. இதில் பட்டதாரிகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ. 12-வது மற்றும் 10-ம் வகுப்பு படித்தவர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். 18 முதல் 35 வயது வரை உள்ள வேலை நாடுநர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் வருகிற 5-ந்தேதி காலை 9மணிக்கு காஞ்சீபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 044-27237124 என்ற தொலைபேசி எண் வாயிலாக கேட்டறிந்து பயன் பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story