மின் கட்டண உயர்வை கண்டித்து திருப்பூர், கோவையில் ஜவுளித்தொழில் உற்பத்தி நிறுத்தம்


மின் கட்டண உயர்வை கண்டித்து திருப்பூர், கோவையில் ஜவுளித்தொழில் உற்பத்தி நிறுத்தம்
x
தினத்தந்தி 5 Nov 2023 3:24 AM GMT (Updated: 5 Nov 2023 3:30 AM GMT)

ஜவுளித்தொழில் உற்பத்தி நிறுத்தப்படுவதால் பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

கோவை,

திருப்பூர், கோவை மாவட்டங்களில், விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் பரவலாக நடந்து வருகிறது. தினமும் ஒரு கோடி மீட்டர் காடா துணிகள் உற்பத்தியாகின்றன. மின் கட்டண உயர்வு, மூலப் பொருள் விலை உயர்வு மற்றும் மார்க்கெட் மந்த நிலை உள்ளிட்ட காரணங்களால், சமீப நாட்களாக, விசைத்தறி தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது. மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, காடா துணி உற்பத்தி சார்ந்த சிறு குறு தொழில் நிறுவனத்தினர், தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நூல் விலை ஏற்றம், மின் கட்டண உயர்வை கண்டித்து திருப்பூர், கோவையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜவுளித்தொழில் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று முதல் 20 நாட்கள் (25ஆம் தேதி வரை) போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு தொழில்துறை கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தால் பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.


Next Story