பொது வினியோகத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம்


பொது வினியோகத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
x
தினத்தந்தி 11 Aug 2023 6:45 PM GMT (Updated: 11 Aug 2023 6:45 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் பொது வினியோகத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் 9 தாலுகா அலுவலகங்களில் இன்று நடக்கிறது

விழுப்புரம்

விழுப்புரம்

பொது வினியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன்பொருட்டு விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) 9 தாலுகா அலுவலகத்திலும் குடிமைப்பொருள் தனி தாசில்தார், வட்ட வழங்கல் அலுவலர்களால் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகலட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகளை கேட்டு கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மேலும் செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தல், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அங்கீகாரச்சான்று கோரும் கோரிக்கை மனுவையும், பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களையும், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள், சேவை குறைபாடுகள் குறித்த புகார்களையும் குடும்ப அட்டைதாரர்கள் வழங்கி பொது வினியோகத்திட்டம் தொடர்பான தங்களது குறைகளுக்கு தீர்வு காணலாம்.

மேற்கண்ட தகவல் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story