திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x

திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.

திருவள்ளூர்

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பசுமை வீடு, கடன் உதவி, வேலைவாய்ப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 278 மனுக்களை அளித்தனர்.

நடவடிக்கை

அந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து தகுதியுள்ள மனுக்கள் மீது அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதைத் தொடர்ந்து கலெக்டர் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

வட்டியில்லா கடன்

பின்னர் கலெக்டர் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நண்பர்கள் நல சங்கம் சார்பாக சேமிக்கப்பட்ட நிதியில் இருந்து அந்த சங்கத்தின் 12 உறுப்பினர்களுக்கு தொழில் கடனாக தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் வட்டியில்லா கடன் தொகையை பயனாளிகளுக்கு வழங்கினார். முகாமில் துணை கலெக்டர் மதுசூதனன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துறை அலுவலர் கலைச்செல்வி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் காயத்ரி சுப்பிரமணி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாபு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பேச்சு பயிற்சியாளர் சுப்புலட்சுமி மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அரசு அதிகாரிகள் பலர் கலந்துக் கொண்டனர்.


Next Story