புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டி: 700 காளைகள், 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு


புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டி: 700 காளைகள், 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
x

போட்டியில் 700 காளைகள் கலந்துகொண்டுள்ள நிலையில், 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளை அடக்கி வருகின்றனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே ஒத்தக்கடை அரசப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. மயில்வாகன சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள் கலந்துகொண்டுள்ள நிலையில், 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளை அடக்கி வருகின்றனர். போட்டியில் வெற்றிபெறும் காளையின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது.


Next Story