தண்ணீர் இல்லை: அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய ஆசாமி..!


தண்ணீர் இல்லை: அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய ஆசாமி..!
x

மும்பையிலிருந்து நாகர்கோவில் செல்லும் ரயில் திண்டிவனம் அருகே அபாய சங்கிலி இழுக்கப்பட்டு நின்றது

திண்டிவனம்:

மும்பையிலிருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் ரயில் திண்டிவனத்துக்கு நேற்று இரவு 9 மணியளவில் வந்து சேர்ந்தது. திண்டிவனத்தில் இருந்து ரயில் புறப்பட்ட போது ஒரு ஆசாமி அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளார்.


ரயிலில் இருந்து இறங்கிய அதிகாரிகள் எந்தப் பகுதியில் அபாயம் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து அதை சரி செய்து மீண்டும் ரயிலை இயக்கினர். இதனால் 20 நிமிடங்கள் திண்டிவனத்திலேயே ரயில் நின்று கொண்டிருந்தது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

அதிகாரிகள் விசாரணையில் ரயில் பெட்டியில் தண்ணீர் இல்லாததால் அபாய சங்கிலி இழுக்கப்பட்டு இருப்பதாக முதல் விசாரணையில் தெரிந்தது.


Related Tags :
Next Story