கடலாடியில் மாட்டுவண்டி பந்தயம்


கடலாடியில் மாட்டுவண்டி பந்தயம்
x

தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு கடலாடியில் மாட்டுவண்டி பந்தயம் நடக்கிறது.

ராமநாதபுரம்

சாயல்குடி,

கடலாடியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை விழா மற்றும் 34-வது ஆண்டு முளைப்பாரி உற்சவ விழா, ராஜராஜேசுவரி அம்மன் கோவில் 5-ம் ஆண்டு பாலாபிஷேக விழாவை முன்னிட்டு ஆப்பநாடு மாட்டு வண்டி பந்தய குழு சார்பில் மாட்டுவண்டி பந்தயம் நடக் கிறது. இந்த பந்தயம் ரூ. 10 லட்சம் ரொக்க பரிசு தொகை உடன் பெரிய மாடு, நடுமாடு, சின்ன மாடு பந்தயம் நடை பெறுவதாக கடலாடி ஒன்றிய குழு தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தெரிவித்தார். நாளை (27-ந்தேதி) கடலாடியில் நடைபெறும் மாட்டு வண்டி பந்தயத்திற்கு ராமநாதபுரம் தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை தாங்குகிறார். கடலாடி நகர் தேவர் உறவின்முறை தலைவர் முனியசாமி முன்னிலை வகிக்கிறார். பெரிய மாடு பந்தயத்தை முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி தொடங்கி வைக்கிறார். நடுமாடு பந்தயத்தை ஆப்பநாடு மறவர் சங்கத் தலைவர் தூரி முனியசாமி தொடங்கி வைக்கிறார். சின்ன மாடு பந்தயத்தை முன்னாள் ஆப்பநாடு மறவர் சங்கத் தலைவர் கீழத்தூவல் ராமசாமி தொடங்கி வைக்கிறார். பெரிய மாடு, நடுமாடு, சின்னமாடு பந்தயத்தில் கொடி வாங்கும் சாரதிக்கு கிடாய் பரிசை ரேக்ளா ரேஸ் முன்னாள் மாநில தலைவர் மோகன சாமிகுமார் வழங்குகிறார். பெரிய மாடு, நடுமாடு, சின்ன மாடு பந்தயத்தில் கொடி கொடுக்கும் சாரதிக்கு கிடாய் பரிசு ராமேசுவரம் துணை தலைவர் தட்சிணாமூர்த்தி வழங்கு கிறார். வெற்றிபெறும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு நினைவு பரிசு கடலாடி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் முனியசாமி பாண்டியன் வழங்குகிறார். பொது அன்னதானம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கடலாடி ஆப்பநாடு மாட்டுவண்டி பந்தய குழுத் தலைவரும் முன்னாள் கடலாடி ஒன்றிய குழு தலைவருமான முனியசாமி பாண்டியன் செய்து வருகிறார்.


Next Story