பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்


பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்
x

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரெயிலில் முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது.

சென்னை:

பண்டிகை கால நாட்களில் ரெயில் டிக்கெட் முன்பதிவு 120 நாட்களுக்கு முன்பு தொடங்கப்படும். அவ்வாறு டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விடும்.

அந்தவகையில் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரெயிலில் முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது. பொதுமக்கள் ஐ.அர்.சி.டி.சி இணையதளம் வழியாகவோ அல்லது ரெயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களிலிலோ ரெயில் டிக்கேட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஜனவரி 12-ந்தேதி பயணிக்க இன்று (திங்கட்கிழமை) முன்பதிவு செய்யலாம். ஜனவரி 13-ந்தேதி பயணிக்க நாளை(செவ்வாய்கிழமை) முன்பதிவு செய்யலாம், ஜனவரி 14-ந்தேதி பயணம் செய்ய வருகிற 14-ந்தேதி முன்பதிவு செய்யலாம், பொங்கல் தினமான ஜனவரி 15-ந்தேதி பயணம் செய்ய வருகிற 15-ந்தேதி முன்பதிவு செய்யலாம். ஜனவரி 16-ந்தேதி பயணம் செய்ய வருகிற 16-ந்தேதி முன்பதிவு செய்து கொள்ளலாம்.


Next Story