நல்ல செய்தி என்னவென்றால்...சென்னையை விட்டு நாளை முதல் இதர மாவட்டங்களுக்கு இடம்பெயரும் மழை - தமிழ்நாடு வெதர்மேன்


நல்ல செய்தி என்னவென்றால்...சென்னையை விட்டு நாளை முதல் இதர மாவட்டங்களுக்கு இடம்பெயரும் மழை - தமிழ்நாடு வெதர்மேன்
x

இன்று மேகக் கூட்டங்கள் நெருங்கி வருவதைப் பார்க்கும் போது, சென்னைக்கு ஒரு நீண்ட நெடிய மழை நாளாக அமையும் என்று எதிர்பார்க்கலாம் என தமிழ்நாடு வெதர்மேன் கூறி உள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் இன்று கனமழை பெய்ய வாய்ப்புகள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருப்பதாவது:-

இன்று மேகக் கூட்டங்கள் நெருங்கி வருவதைப் பார்க்கும் போது, சென்னைக்கு ஒரு நீண்ட நெடிய மழை நாளாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். இன்று வட சென்னையைக் காட்டிலும் தென் சென்னை கூடுதலாக மழை பெறும்.

வட கடலோர மாவட்டங்களிலிருந்து மேகக் கூட்டங்கள் இன்று ஒரு வேளை உள் மாவட்டங்களை நோக்கி நகரக் கூடும். உதாரணமாக திருவண்ணாமலை, விழுப்புரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வாய்ப்பு அதிகரிக்கும். பாண்டிச்சேரி, கடலூர், ஆகிய பகுதிகளும் இன்றைய மழை விருந்தில் பங்கேற்கலாம். ஒரு வேளை மழை பெய்யாவிட்டால் நாளை நிச்சயம் பெய்யும்.

பெரம்பூரைத் தொடர்ந்து கத்திவாக்கம் பகுதியல் 161 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.

நல்ல செய்தி என்னவென்றால் மழை நாளை முதல் இதர மாவட்டங்களுக்கு இடம்பெயர்கிறது. இதனால் நாளை முதல் சென்னையில் மழை படிப்படியாகக் குறையும். நேற்றும் இன்றும் பெய்யும் மழையைக் காட்டிலும் நாளை மழை குறையும் என்று தெரிவித்துள்ளார். இதனால் சென்னை வாசிகள் மழையின் பிடியில் இருந்து தப்பிக்கலாம்.


Next Story