பிறந்தநாளையொட்டி ராஜீவ்காந்தி நினைவிடத்தில் இருந்து ஜோதி யாத்திரை


பிறந்தநாளையொட்டி ராஜீவ்காந்தி நினைவிடத்தில் இருந்து ஜோதி யாத்திரை
x

பிறந்தநாளையொட்டி ராஜீவ்காந்தி நினைவிடத்தில் இருந்து ஜோதி யாத்திரை தொடங்கியது.

காஞ்சிபுரம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். அவர் உயிர் நீத்த இடத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. ஆண்டு தோறும் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் மற்றும் நினைவுநாளையொட்டி இந்தியாவில் அமைதி வேண்டி ராஜீவ் ஜோதி யாத்திரை செல்வது வழக்கம்.

20-ந்தேதி

அந்த வகையில் நேற்று மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராஜீவ்காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவரும் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ.வுமான செல்வபெருந்தகை ராஜீவ் ஜோதியை ஏற்றி யாத்திரை தலைவர் துரையிடம் ஒப்படைத்தார். இந்த ராஜீவ் ஜோதியானது கர்நாடகா, தெலுங்கானா, மராட்டியம், மத்திய பிரதேசம், ஹரியானா வழியாக வருகிற 20-ந்தேதி டெல்லியில் வீர் பூமியில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியிடம் ஒப்படைக்கப்படும்.

அதன் பின்னர் டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராஜீவ் ஜோதியை வைத்து அஞ்சலி செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் அவளூர் நாகராஜ், நகர காங்கிரஸ் கட்சி தலைவர் அருள்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story