இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!


இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
x

மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமேஸ்வரம்,

மண்டபம் பகுதியில் இருந்து கடந்த 14-ந் தேதி 5 விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்ற 27 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

இவர்களில் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேசுவரத்தை சேர்ந்த 15 மீனவர்கள் நேற்று மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 15 மீனவர்களையும் வருகிற 9-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், மற்ற 12 மீனவர்களும் இன்று ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களுக்கும் நீதிமன்ற காவல் நவம்பர் 8ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த 27 மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story