மாயமான பிளஸ்-1 மாணவன் பிணமாக மீட்பு


மாயமான பிளஸ்-1 மாணவன் பிணமாக மீட்பு
x

உத்தமபாளையத்தில் மாயமான மாணவர் பிணமாக மீட்கப்பட்டார்

தேனி

உத்தமபாளையம் கல்லறை தோட்ட தெருவை சேர்ந்த ஸ்டீபன் மகன் மாதவன் (வயது16). அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் கடந்த 18-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்டீபன் உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாதவனை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று அங்குள்ள கல்லறை தோட்டத்தின் பின்புறம் உள்ள பாழடைந்த கிணற்றின் அருகே மாதவன் அணிந்திருந்த செருப்பு மற்றும் டாலர் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு படையினரும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்தனர்.

இந்நிலையில் சந்தேகம் அடைந்த போலீசார் கிணற்றில் இருந்த தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றினர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி சகதியில் சிக்கி இருந்த மாதவனின் உடலை மீட்டனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளைம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தனது மகன் சாவில் சந்ேதகம் இருப்பதாக மாதவனின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் ே்பாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story