முதல்-அமைச்சர் குறித்து அவதூறு பரப்பிய பா.ஜனதாபிரமுகர் கைது


தினத்தந்தி 22 Oct 2023 6:45 PM GMT (Updated: 22 Oct 2023 6:46 PM GMT)

முதல்-அமைச்சர் குறித்து அவதூறு பரப்பிய பா.ஜனதா பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி புது கிராமத்தை சேர்ந்தவர் ஜான் ரவி. பா.ஜனதா பிரமுகர். இவர் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து மதுரை சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து ஜான்ரவியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதற்காக நேற்று மதியம் மதுரை மாநகர போலீசார் தூத்துக்குடிக்கு வந்தனர். அவர்கள் புதுகிராமத்தில் வீட்டில் இருந்த ஜான்ரவியை கைது செய்து மதுரைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story