கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து இன்று முதல் நீர் திறப்பு - அரசு உத்தரவு


கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து இன்று முதல் நீர் திறப்பு - அரசு உத்தரவு
x
தினத்தந்தி 29 Feb 2024 10:00 PM GMT (Updated: 29 Feb 2024 10:00 PM GMT)

நெற்பயிர்கள் மற்றும் குடிநீர் தேவைக்காக கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து இன்று (வௌ்ளக்கிழமை) முதல் நீர் திறக்கப்படுகிறது.

சென்னை,

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மற்றும் அனந்தனார் கால்வாய் கடைமடை பகுதி நெற்பயிர்களை காப்பாற்றும் விதமாகவும் மற்றும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக்கொடை விழாவிற்கு பத்மநாபபுரம் புத்தனார் கால்வாய் வழியாக தண்ணீர் வழங்குவதற்கும் சேர்த்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 15-ந்தேதி வரை தினசரி 400 கன அடி வீதம் தண்ணீர் வழங்குவதற்கு கூடுதல் கால நீட்டிப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

அதேபோல பத்மநாபபுரம் புத்தனார் கால்வாயில் உள்ள பயிர்களை காப்பாற்ற வருகிற 15-ந்தேதிக்கு மேல் தண்ணீர் தேவைப்படும் பட்சத்தில் மேலும் 5 நாட்களுக்கு தினசரி 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படும்.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்படும் குடி தண்ணீர் பற்றாக்குறையை சரி செய்ய அனைத்து கால்வாய்களுக்கும் தண்ணீர் வழங்குவதன் மூலம் மேலும் 5 நாட்களுக்கு தினசரி 800 கன அடி வீதமும் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து தேவைக்கேற்ப கோதையாறு பாசன திட்ட அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story