சாலையோரத்தில் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றம்


சாலையோரத்தில் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றம்
x

சாலையோரத்தில் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றப்பட்டன.

பெரம்பலூர்

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் பெரம்பலூர்-அரியலூர் சாலை ஓரத்தில் குன்னம் ஊராட்சி சார்பாக மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் கொட்டப்பட்டது. மேலும் மாலை நேரங்களில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் வெளியேறும் புகையால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதாகவும், குப்பைகளை எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், மக்கா குப்பைகளை முறையாக கையாள வேண்டும் என்றும் சில நாட்களுக்கு முன்பு 'தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக குன்னம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அச்சாலை ஓரத்தில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் அகற்றப்பட்டதோடு, அப்பகுதியில் குப்பைகள் எரிக்கப்படுவதும் கைவிடப்பட்டது.


Next Story