பர்கூர் அருகே சுடுகாட்டுக்கு பாதை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை


பர்கூர் அருகே சுடுகாட்டுக்கு பாதை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 2 July 2023 7:30 PM GMT (Updated: 3 July 2023 7:58 AM GMT)
கிருஷ்ணகிரி

மத்தூர்:

பர்கூர் ஒன்றியம் குட்டூர் ஊராட்சிக்குட்பட்ட சேக்கினாம்பட்டி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய சுடுகாட்டுக்கு செல்ல சரியான பாதை வசதி இல்லாததால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் ஆற்றுப்பகுதி உள்ளதால் இடுப்பளவு தண்ணீரில் இறந்தவர்களின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பாக்கியம் (வயது60) என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய இடுப்பளவு தண்ணீரில் சுமந்து சென்றனர். எனவே பொதுமக்கள் நலன்கருதி ஆற்றில் சிறிய பாலம் அமைப்பதுடன், சுடுகாட்டுக்கு செல்வதற்கு ஏற்ப பாதை வசதி அமைத்து தர அப்பகுதி பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.


Next Story