"பாதுகாப்பு பணிகளுக்காக ஓய்வு பெற்ற இந்திய ராணுவ வீரர்கள் வரலாம்" - மலேசியா உள்துறை மந்திரி அழைப்பு


பாதுகாப்பு பணிகளுக்காக ஓய்வு பெற்ற இந்திய ராணுவ வீரர்கள் வரலாம் - மலேசியா உள்துறை மந்திரி அழைப்பு
x

மலேசியாவில் இன்வெஸ்ட்மெண்ட் விசா மூலம் தங்க விரும்புபவர்கள் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என அந்நாட்டின் உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர்,

மலேசிய தொழில் அதிரபரான டத்தோ பிரகதீஷ் குமார், தனது சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் உள்ள தனது இல்லத்திற்கு வருகை தர மலேசிய உள்துறை மந்திரிக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்று மலேசிய உள்துறை மந்திரி டத்தோ ஹம்சா பின் ஜெய்னுதீன், பூலாம்பாடிக்கு வருகை தந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், மலேசியாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக இந்தியாவில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் தாராளமாக வரலாம் என்று தெரிவித்தார். தமிழகத்தில் இருந்து மலேசியாவிற்கு செல்லும் தொழிலாளர்களுக்கு வயது வரம்பு 45 ஆக இருப்பதை மாற்றியமைக்க பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அவர் கூறினார்.

அதே போல் மலேசிய நாட்டில் 20 ஆண்டுகள் தங்குவதற்கு இன்வெஸ்ட்மென்ட் விசா என்று அழைக்கப்படும் பிரீமியம் விசா எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு தகுதியானவர்கள் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்றும் ஹம்சா பின் ஜெய்னுதீன் தெரிவித்தார்.


Next Story