தென்மாநிலங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் !


தென்மாநிலங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் !
x

கோப்புப்படம் 

பொன்னேரியில் ஒப்பந்த தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ள உள்ளிருப்பு போராட்டத்தால், சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

சென்னை,

இந்தியன் சமையல் எரிவாயு நிரப்பும் ஆலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பள உயர்வு, பணி நிரந்தரம், காப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை நிறைவேற்ற அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஒப்பந்த தொழிலாளர்களுடன் ஆலை நிர்வாக அதிகாரிகள், வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்த போராட்டட்ததால், சமையல் எரிவாயு சிலிண்டர் நிரப்பும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

உள்ளிருப்பு போராட்டம் தொடரும் பட்சத்தில், தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.


Next Story