காவல்துறை உங்கள் நண்பன்.. வாகன ஓட்டிகளுக்கு ராக்கி கயிறு கட்டிய காவலர்


காவல்துறை உங்கள் நண்பன்..  வாகன ஓட்டிகளுக்கு ராக்கி கயிறு கட்டிய காவலர்
x

கோவையில் நண்பர்கள் தினத்தை முன்னிட்டு வாகன ஓட்டிகளுக்கு ராக்கி கயிறு கட்டி காவலர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கோவை:

நாடு முழுவதும் இன்று நண்பர்கள் தினம் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக வட இந்தியாவில் நண்பர்கள் தினம் தனது நண்பர்களுக்கு ராக்கி கயிறு கட்டி கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன் ஒருபகுதியாக இன்று கோவை மாவட்டம் அன்னூர் கைகாட்டி பகுதியில் நெடுஞ்சாலை ரோந்து வாகன தலைமை காவலர் ஜேம்ஸ் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோருக்கு ராக்கி கயிறு கட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். வாகன ஓட்டிகளும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

வாகன ஓட்டிகளை நிறுத்தி அபராதம் விதித்து அடாவடி வசூலில் ஈடுபட்டு வரும் ஒரு சில காவலர்களுக்கு மத்தியில் அன்னூர் தலைமை காவலர் ஜேம்சின் இச்செயல் காவல் துறை உங்கள் நண்பன் என்ற கூற்றை உண்மையாக்கி வருகிறது என்பதே நிஜம்.

அன்னூர் போலீசாரின் இச்செயல் பொதுமக்களிடையே வெகுவாக பாராட்டுக்களை பெற்று வருகிறது.


Next Story