'24 மணி நேரத்தில் ரூபா ஐ.பி.எஸ். பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்' - ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி நோட்டீஸ்


24 மணி நேரத்தில் ரூபா ஐ.பி.எஸ். பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் - ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி நோட்டீஸ்
x

ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா 24 மணி நேரத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என ரோகிணி சிந்தூரி ஐ.ஏ.எஸ். நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் பணியாற்றி வந்த ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா, இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக பணியாற்றி வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரியின் தனிப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்நிலையில் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா 24 மணி நேரத்தில் எழுத்துப்பூர்வமாகவும், சமூக வலைதளத்திலும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என ரோகிணி சிந்தூரி ஐ.ஏ.எஸ். தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மேலும் தனக்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் எனவும், இதனை புறக்கணிக்கும் பட்சத்தில் ரூபா மீது குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படும் எனவும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story